என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
நடிகர் நாக சைதன்யா - நடிகை சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இப்போது அவர் நடித்த கஸ்டடி படம் புரோமஷன் நிகழ்ச்சியில் தனது விவாகரத்து குறித்து அந்த பேட்டியில் கூறியுள்ளார். அதன்படி, "சமந்தா எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் இருவரும் பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. சட்டப்படி விவாகரத்து பெற்று ஓராண்டு ஆகிறது. நாங்கள் பிரிந்த பிறகு நான் சமந்தாவோடு சேர்ந்து வாழ்ந்த நாட்களை கவுரவிக்கிறேன்.
உண்மையில் சமந்தா மிகவும் நல்ல பெண். சமூக வலைத்தளங்களில் வந்த வதந்தி காரணமாகத்தான் எங்கள் இருவர் இடையே கருத்து வேறுபாடு ஆரம்பம் ஆனது. அது மெல்ல மெல்ல பெரிதாகி கடைசியில் பிரிந்து விட வேண்டிய நிலைமை வந்தது. முதலில் நான் அந்த வதந்தி செய்தியை கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. நாங்கள் பிரிந்து விட்டாலும் ஒருவருக்கு ஒருவர் நல்ல மரியாதை வைத்துள்ளோம். சமூக வலைத்தளங்களில் எங்களின் கடந்த காலத்தில் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத மூன்றாவது நபரை இதற்குள் இழுத்து அவரை அவமரியாதை செய்தனர். என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என நினைத்துக்கொள்கிறேன். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.