படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

இயக்குனரும், நடிகருமான மனோபாலா நேற்று உடல்நலக் குறைவால் காலமானார் . அவரது மறைவுக்கு ஏராளமான திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள மனோபாலா, அதையடுத்து யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றபோது, தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் மனோபாலா. அப்போது படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு யோகி பாபு, நடிகர் சாம்ஸ் உட்பட பலரும் கேக் ஊட்டி விடுகிறார்கள்.
இதுகுறித்த வீடியோ ஒன்றை காமெடி நடிகர் சாம்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், மனோபாலா சாரின் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளது. நண்பர் கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்தில் மனோபாலா சாருடம் இணைந்து நடித்தேன். அவர் கடைசியாக நடித்து கடைசியாக பிறந்த நாள் கொண்டாடிய படமாக இது இருக்கும். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் கதிர்வேலு கூறுகையில், ‛‛மரண வேதனையிலும் படப்பிடிப்பு தளம் வந்து படுத்தபடியே "என்னால முடியலடா! மருத்துவ மனைக்கு போய் வருகிறேன்" என சொல்லி விட்டு போனவரே இப்படி சொல்லாமல் போவது முறையா? கடைசி பிறந்த நாளை எம்மோடு கொண்டாடி விட்டு இப்படி நடுவழியில் திண்டாட விட்டுவிட்டு போதல் சரியா? காலங்கள் கடந்தாலும் கடைசியாய் நடித்து எங்களோடு வாழ்ந்த கணங்கள் என்றும் எங்கள் நினைவில் நிலைத்து நிற்கும்,'' என தெரிவித்துள்ளார்.