கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
இயக்குனரும், நடிகருமான மனோபாலா நேற்று உடல்நலக் குறைவால் காலமானார் . அவரது மறைவுக்கு ஏராளமான திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள மனோபாலா, அதையடுத்து யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றபோது, தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் மனோபாலா. அப்போது படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு யோகி பாபு, நடிகர் சாம்ஸ் உட்பட பலரும் கேக் ஊட்டி விடுகிறார்கள்.
இதுகுறித்த வீடியோ ஒன்றை காமெடி நடிகர் சாம்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், மனோபாலா சாரின் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளது. நண்பர் கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்தில் மனோபாலா சாருடம் இணைந்து நடித்தேன். அவர் கடைசியாக நடித்து கடைசியாக பிறந்த நாள் கொண்டாடிய படமாக இது இருக்கும். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் கதிர்வேலு கூறுகையில், ‛‛மரண வேதனையிலும் படப்பிடிப்பு தளம் வந்து படுத்தபடியே "என்னால முடியலடா! மருத்துவ மனைக்கு போய் வருகிறேன்" என சொல்லி விட்டு போனவரே இப்படி சொல்லாமல் போவது முறையா? கடைசி பிறந்த நாளை எம்மோடு கொண்டாடி விட்டு இப்படி நடுவழியில் திண்டாட விட்டுவிட்டு போதல் சரியா? காலங்கள் கடந்தாலும் கடைசியாய் நடித்து எங்களோடு வாழ்ந்த கணங்கள் என்றும் எங்கள் நினைவில் நிலைத்து நிற்கும்,'' என தெரிவித்துள்ளார்.