தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர்கள் இயக்குனராகி வெற்றி பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தொடர்ந்து தோல்வி படம் கொடுத்தவர் மனோபாலா.
மனோபாலா இயக்கிய முதல் திரைப்படமான 'ஆகாய கங்கை' தோல்வியடைந்தது. நடிகர் மோகன் வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில் அவருக்கு மிக உதவியாக இருந்தவர் மனோபாலா. அப்போது உச்சத்தில் இருந்த மோகன் தனது நண்பருக்கு படம் நடித்து கொடுக்க முன்வந்தார், அந்த படம் 'நான் உங்கள் ரசிகன்'. இந்த படத்தின் பாடல்கள் ஹிட் ஆனாலும் படம் தோல்வி அடைந்தது.
இரண்டு தோல்விகளால் துவண்டுபோய் இருந்த மனோபாலாவுக்கு 'முதல் வசந்தம்' படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் தோல்வி படம் கொடுத்தவர் தனது படத்தை இயக்கக்கூடாது என்று தயாரிப்பாளர் கருதியதால் வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த மணிவண்ணன் அந்த படத்தை இயக்கினார்.
இதனால் விரக்தியின் உச்சிக்கு சென்ற மனோபாலா. திருச்சி வெக்காளி அம்மனிடம் மிக உருக்கமாகக் கடிதம் எழுதி வேண்டுகோள் வைத்தார். அடுத்த படம் தோல்வி அடைந்தால் இங்கு வந்து தற்கொலை செய்து கொள்வேன் என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாக கூறுவார்கள்.
பிரார்த்தனை முடிந்து சென்னை வந்த மனோபாலாவிற்கு போன் செய்த தயாரிப்பாளர் கலைமணி “மோகன் கால்ஷீட் தரேன்னு சொல்லிட்டாரு. ஆனா டைரக்ஷன் நீதான் செய்யணும்னு கண்டிஷனா சொல்லிட்டாரு” என்று சொல்ல, மனோபாலாவிற்கு ஆனந்தக் கண்ணீர். வாய்ப்பு தேடிய காலத்தில் தனக்குப் பல்வேறு விதங்களில் உதவி செய்த மனோபாலாவை மறக்காமல் மீண்டும் ஆதரிக்க முன்வந்தார் மோகன். அப்போது மோகன் பல திரைப்படங்களில் ஹீரோவாக பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் 'இரவு நேரங்களில் நடித்துத் தருகிறேன்' என்று சொன்னார். எனவே இரவுக் காட்சிகள் அதிகம் இருக்குமாறு எழுதப்பட்ட படம்தான் 'பிள்ளை நிலா'.
தன்னுடைய காதல் நிறைவேறாத காரணத்தால் தற்கொலை செய்து கொள்ளும் ஓர் இளம்பெண்ணின் ஆவி, ஒரு சிறுமியின் உடலில் புகுந்து கொண்டு காதலனையும் அவனது குடும்பத்தையும் பழிவாங்க நினைக்கும். அந்த ஆவி புகுந்த சிறுமியாக பேபி ஷாலினி நடித்து அசத்தியிருந்தார். புதுமையான கதையும், இளையராஜாவின் மேற்கத்திய பின்னணி இசையும், ஷாலினியின் மிரட்டலான நடிப்பும் படத்தை வெற்றி பெற வைத்தது. மனோபாலா அதன் பிறகு வெற்றி இயக்குனராக வலம் வந்தார்.