நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசை அமைப்பதற்கு இணையாக இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் மாராட்டிய மாநிலம் புனேயில் அவரது இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. அங்குள்ள ராஜ் பகதூர் மில் வளாகத்தில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியை காண திரளான மக்கள் கூடியிருந்தனர்.
நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது மேடைக்கு முன்னால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி நிகழ்ச்சியை நிறுத்துமாறு சத்தமாக கூறினார். இதை கண்டு திடுக்கிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் எதற்காக என்பது போல் அந்த அதிகாரியை பார்க்க... அவர் இரவு 10 மணிவரைதான் இசை நிகழ்ச்சி மணி 10 ஆகிவிட்டது என்றார். தனது கை கடிகாரத்தை பார்த்த ரஹ்மான் புன்னகை செய்தபடியே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.
“இசை நிகழ்ச்சி நடத்த இரவு 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அந்த நேரம் கடந்து விட்டதால் இசை நிகழ்ச்சியை நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொண்டோம். உடனடியாக ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது குழுவினரும் இசை நிகழ்ச்சியை நிறுத்தி விட்டனர். எனவே வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை” என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.