ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் பிரபுதேவா தனது முதல் திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற்று ஒதுங்கி தனியாகவே வாழ்ந்து வந்தார். இடையில் நடிகை நயன்தாராவுடன் காதல் என சில நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டார். அதன்பிறகு அந்த விஷயம் அடங்கிய நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் சத்தமே இல்லாமல் டாக்டர் ஹிமானி சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு ஆச்சரியம் அளித்தார் பிரபுதேவா.
இந்த நிலையில் முதன்முறையாக தனது மனைவி ஹிமானி சிங்குடன் திருப்பதி கோயிலில் தரிசனம் செய்துள்ளார் பிரபுதேவா. இவர்கள் இருவரும் கோயிலுக்கு வந்து சென்ற புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. பிரபுதேவாவின் தற்போதைய மனைவியான ஹிமானி சிங் ஒரு பிசியோதெரபிஸ்ட். பிரபுதேவா தனது முதுகு வலி சிகிச்சைக்காக இவரிடம் சிகிச்சை பெற்றபோது இருவருக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.