மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் |
நடிகர் பிரபுதேவா தனது முதல் திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற்று ஒதுங்கி தனியாகவே வாழ்ந்து வந்தார். இடையில் நடிகை நயன்தாராவுடன் காதல் என சில நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டார். அதன்பிறகு அந்த விஷயம் அடங்கிய நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் சத்தமே இல்லாமல் டாக்டர் ஹிமானி சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு ஆச்சரியம் அளித்தார் பிரபுதேவா.
இந்த நிலையில் முதன்முறையாக தனது மனைவி ஹிமானி சிங்குடன் திருப்பதி கோயிலில் தரிசனம் செய்துள்ளார் பிரபுதேவா. இவர்கள் இருவரும் கோயிலுக்கு வந்து சென்ற புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. பிரபுதேவாவின் தற்போதைய மனைவியான ஹிமானி சிங் ஒரு பிசியோதெரபிஸ்ட். பிரபுதேவா தனது முதுகு வலி சிகிச்சைக்காக இவரிடம் சிகிச்சை பெற்றபோது இருவருக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.