'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சமீபத்தில் த்ரிஷா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : இந்த படத்தில் நான் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்திற்கு உதாரணமாக மணிரத்னம் என்னை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை முன் உதாரணமாக எடுத்துக்கொள்ள கூறினார். ஜெயலலிதாவின் நடை, பேச்சு நிர்வாக திறன் போன்ற தன்மைகளை எடுத்து கொண்டேன். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் முகத்தில் காட்டி கொள்ளாமல் இருப்பார் ஜெயலலிதா. அது தான் குந்தவை கதாபாத்திரத்தின் குணாதிசயம். அந்த தன்மையும் முன் உதாரணமாக எடுத்து கொண்டதாக த்ரிஷா கூறினார்.