Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வன் - வரலாற்றையும், கிளைமாக்சையும் மாற்றிய மணிரத்னம்

29 ஏப், 2023 - 10:29 IST
எழுத்தின் அளவு:
Ponniyin-Selvan-:-Maniratnam-changed-history-and-climax

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக எடுத்தது அந்நாவலின் வாசர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அதே சமயம் நாவலில் இருந்த சில கதாபாத்திரங்களை முதல் பாகத் திரைப்படத்தில் துளி கூட பயன்படுத்தாததும் அவர்களை வருத்தமடையச் செய்திருந்தது.

இந்நிலையில் நேற்று வெளியான இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்கி எழுதிய நாவலில் இல்லாத கிளைமாக்சை படத்திற்காக அமைத்திருக்கிறார். அதுவும் சோழர்களின் பெருமையைக் குலைப்பது போன்ற ஒரு காட்சியாக அமைந்துள்ளது என பலரும் வருத்தமடைந்துள்ளார்கள்.



கல்கி எழுதிய நாவலின்படி அருள்மொழி வர்மன் அரசராகப் பதவியேற்பதைத் தவிர்த்து, சேந்தன் அமுதனை அரசனாக முடிசூடுவார். அந்த சேந்தன் அமுதன் தான் உத்தம சோழன் என சுந்தர சோழருக்கு அடுத்து அரியணை ஏறி சோழ தேசத்தை ஆட்சி புரிகிறார். உத்தம சோழன் என அழைக்கப்பட்ட இவர் 15 ஆண்டுகள் சோழ தேசத்தை ஆட்சி செய்த பிறகே அருண்மொழி வர்மன் அரியணை ஏறினார். அதன்பிறகு ராஜராஜ சோழன் என மாபெரும் சரித்திரத்தைப் படைத்தார் அருண்மொழி.

ஆனால், 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் செம்பியன் மாதேவியின் வளர்ப்பு மகனான மதுராந்தகனுக்கு அருள்மொழி வர்மன் முடிசூட்டுகிறார். மதுராந்தகன் பாண்டிய மன்னனுக்குப் பிறந்தவர். நந்தினியின் சகோதரர். இப்படியிருக்க படத்தில் சேந்தன் அமுதனுக்கு முடிசூடாமல், மதுராந்தகனுக்கு முடி சூட்டி மணிரத்னம் வரலாற்றை மாற்றியது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வரலாற்றுப் படத்தில் இப்படி வரலாற்றை மாற்றலாமா? என அவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் பட தயாரிப்பாளர் எஸ்எஸ் சக்கரவர்த்தி காலமானார்அஜித் பட தயாரிப்பாளர் எஸ்எஸ் ... ரசிகர்களை அழைத்து பாராட்டிய விஜய் ரசிகர்களை அழைத்து பாராட்டிய விஜய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Arul Siva Murugan Velayutham - Bangalore,இந்தியா
03 மே, 2023 - 12:19 Report Abuse
Arul Siva Murugan Velayutham உத்தம சோழனின் பெயர் மதுராந்தகன் இல்லை ... மதுராந்தகன் அருள் மொழி வர்மனின் மகனின் பெயர். அருள் மொழி வர்மன் முதலாம் இராஜ ராஜன் எனவும் மதுராந்தகன் முதலாம் இராஜேந்திர வர்மன் எனவும் அழைக்கப்பட்டனர்... எனவே, கல்கியின் புதினத்தை ஒப்பிடும் பொழுது, மணிரத்தினத்தின் கதை வரலாறோடு ஒத்துப்போகிறது என்பதே எனது எண்ணம்.
Rate this:
veeramani - karaikudi,இந்தியா
02 மே, 2023 - 11:13 Report Abuse
veeramani அன்றைய சரித்திர ஆராய்ச்சியாளர் திரு ராஜமன்னார் அவர்களின் சோழ வரலாறு பற்றி படித்தவர்கள் கூறுவது வேறு . கல்கி க்ரிஷ்ணமுர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் காவியமும் சோழர்களின் உண்மையான வரலாறு கிடையாது. ஐவரும் சில கற்பனைகளை பாத்திரங்களாக எளிதியுள்ளார். நந்தினி, தியாகவிடங்கர், சேந்தன் அமுதன், பூங்குழலி, ஆல்வார்க்கடியான், கந்தமாறன் , ஜோதிடர் போன்ற கத பாத்திரங்கள் கதைக்கு தேவையானமாதிரி காவியம் படைத்துள்ளார். சினிமா எடுக்கும்பொழுது சில கிளை மாகே ஸ் வே ண்டும், பின்னர் படம் ஓடி பணம் பார்க்கலாம்.
Rate this:
AKM KV SENTHIL MUSCAT - muscat,ஓமன்
02 மே, 2023 - 10:06 Report Abuse
AKM KV SENTHIL MUSCAT நான் தினமலர் விமர்சனம் பார்த்து விட்டு தான் தியேட்டருக்கு சென்றேன் ஆனால் படம் மிகவும் மோசம் பின்னணி இசை மற்றும் டிரெக்ஷன் வெரி புவர்
Rate this:
R Ravikumar - chennai ,இந்தியா
30 ஏப், 2023 - 08:39 Report Abuse
R Ravikumar மணிரத்னம் படைத்த கிளைமாக்ஸ் சரிதான் . மதுராந்தக சோழன் / உத்தம சோழன் தான் 14 வருடங்கள் ஆட்சி செய்கிறார் . ஆதித்த கரிகாலனை கொன்றது , மதுராந்தகன் என்ற அனுமனமும் உண்டு ,மதுராந்தகன் தனது சேர அந்தணர்களின் உதவியோடு கொலை செய்தார் என்ற தியரி உண்டு , அல்லது பாண்டிய தேசத்து ஆபத்து உதவி படை அவரை கொன்றது என்ற தியரி உண்டு . நந்தினி மற்றும் சேந்தன் அமுதன் ஒரு கற்பனை கதாபாத்திரம் . ராஜா ராஜா சோழன் தான் பிறகு உத்தம சோழனை தந்திரமாக ஆட்சியை கவிழ்த்து , ஆட்சியை கைப்பற்றுகிறார். கல்கி மதுராந்தகனை பாண்டிய தேசத்து நெடுஞ்சிலியனையும் ஒன்றாக காட்டி சற்று ஜல்லி அடித்து இருப்பர் .
Rate this:
A.SIVASHANMUGAM - Kangeyanoor,இந்தியா
30 ஏப், 2023 - 06:32 Report Abuse
A.SIVASHANMUGAM வரலாற்று புனைவில் கற்பனை கதாபாத்திரத்தை சேர்க்கலாம் ஆனால் வரலாற்று திரிபு ஏற்க முடியாது.. சேந்தன் அமுதன் சேரன்மாதேவியின் மைந்தன் உத்தம சோழன் ஆக முடி சூடி 14வருடங்கள் கழித்து அரியணை ஏறினார் இராஜ இராஜ சோழன்.. மதுராந்தகனை உத்தம சோழன் ஆக காட்சிப்படுத்தியது மன்னிக்கமுடியாத வரலாற்றுத்திரிபு..இத்தனை நல்ல முயற்சி முடிவில் திரிபால் மனத்திருப்தி அடையமறுக்கிறது.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in