நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் |
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக எடுத்தது அந்நாவலின் வாசர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அதே சமயம் நாவலில் இருந்த சில கதாபாத்திரங்களை முதல் பாகத் திரைப்படத்தில் துளி கூட பயன்படுத்தாததும் அவர்களை வருத்தமடையச் செய்திருந்தது.
இந்நிலையில் நேற்று வெளியான இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்கி எழுதிய நாவலில் இல்லாத கிளைமாக்சை படத்திற்காக அமைத்திருக்கிறார். அதுவும் சோழர்களின் பெருமையைக் குலைப்பது போன்ற ஒரு காட்சியாக அமைந்துள்ளது என பலரும் வருத்தமடைந்துள்ளார்கள்.
கல்கி எழுதிய நாவலின்படி அருள்மொழி வர்மன் அரசராகப் பதவியேற்பதைத் தவிர்த்து, சேந்தன் அமுதனை அரசனாக முடிசூடுவார். அந்த சேந்தன் அமுதன் தான் உத்தம சோழன் என சுந்தர சோழருக்கு அடுத்து அரியணை ஏறி சோழ தேசத்தை ஆட்சி புரிகிறார். உத்தம சோழன் என அழைக்கப்பட்ட இவர் 15 ஆண்டுகள் சோழ தேசத்தை ஆட்சி செய்த பிறகே அருண்மொழி வர்மன் அரியணை ஏறினார். அதன்பிறகு ராஜராஜ சோழன் என மாபெரும் சரித்திரத்தைப் படைத்தார் அருண்மொழி.
ஆனால், 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் செம்பியன் மாதேவியின் வளர்ப்பு மகனான மதுராந்தகனுக்கு அருள்மொழி வர்மன் முடிசூட்டுகிறார். மதுராந்தகன் பாண்டிய மன்னனுக்குப் பிறந்தவர். நந்தினியின் சகோதரர். இப்படியிருக்க படத்தில் சேந்தன் அமுதனுக்கு முடிசூடாமல், மதுராந்தகனுக்கு முடி சூட்டி மணிரத்னம் வரலாற்றை மாற்றியது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
வரலாற்றுப் படத்தில் இப்படி வரலாற்றை மாற்றலாமா? என அவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.