சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் நாளை(ஏப்.,28) உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. பொதுவாக எந்த ஒரு பெரிய படம் வெளியானாலும் அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளை ஆரம்பிப்பார்கள். அடுத்து காலை 8 மணிக்கும் மற்றொரு சிறப்புக் காட்சி நடக்கும்.
பொங்கலுக்கு வெளியான 'துணிவு' படத்திற்கு அதிகாலை காட்சிகளும், 'வாரிசு' படத்திற்கு 8 மணி காட்சிகளும் நடைபெற்றன. ஆனால், அனுமதி பெறாமலேயே அந்தக் காட்சிகளை நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதால் கண்டிப்பாக அதிகாலை, காலை சிறப்புக் காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்கு அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், தமிழகத்தில் எந்த ஒரு தியேட்டரிலாவது அனுமதியின்றி அதிகாலை காட்சிகளை நடத்துகிறார்களா என்பதை ஆய்வு செய்யவும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலை 9 மணி முதல்தான் நாளை இப்படத்தின் காட்சிகள் ஆரம்பமாகின்றன. அதே சமயம் பக்கத்து மாநிலத் தலைநகரான பெங்களூருவில் காலை 6 மணிக்கே காட்சிகள் ஆரம்பமாகின்றன. தமிழகத்தில் அதிகாலை காட்சிகளைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கும் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தைத் தந்துள்ளது. அதிகாலை, காலை சிறப்புக் காட்சிகள் இல்லாததால் அது படத்தின் முதல் நாள் வசூலைக் குறைத்துவிடும்.