50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' |
நடிப்பை தீவிரமாக காதலித்து வரும் கேப்ரில்லா படங்களில் தனக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட கச்சிதமாக பயன்படுத்தி பெர்பார்மன்ஸ் செய்துவிடுவார். தற்போது சுந்தரி தொடரின் மூலம் சின்னதிரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். பெண்களுக்கு எதிரான பிரச்னைகள், பெண்ணுரிமை தொடர்பான விவகாரங்களில் துணிச்சலாக கருத்து சொல்லும் கேப்ரில்லா, தன் மீதான விமர்சனத்திற்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் சில மாதங்களுக்கு முன்னர் ஜாக்கெட் போடாமல் போட்டோ ஷூட் செய்து, சில புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார். அதை கிண்டலடித்த சில நெட்டிசன்கள் ஜாக்கெட் போடாமல் போட்டோ ஷூட் நடத்தி, அதற்கு ‛‛ சுருங்க போகும் தோலுக்கு ஓராயிரம் விமர்சனம். சுருங்கிய பின்பும் தொடரட்டும் எனது சுதந்திரம்'' என குறிப்பிட்டு இருந்தார். தமிழருடைய பண்பையும் ஒழுக்கத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டதாக கேப்ரில்லாவை சிலர் விமர்சித்திருந்தனர்.
அந்த கமெண்டின் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்ட கேப்ரில்லா, 'திறமைக்கும், உடலுக்கும், சுய விருப்பத்திற்கும் வித்தியாசம் அறியாத வேடிக்கை மனிதர்கள்' என அந்நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.