போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62 வது படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித் குமார் மீண்டும் தனது பைக் சுற்றுபயணத்தை ஆரம்பித்து விட்டார். தற்போது அஜித் குமார் நேபாளத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள பொகாரா என்ற நகரத்தில் அஜித் குமார் பைக்கில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதோடு அங்குள்ள தனது ரசிகர் ஒருவரின் குடும்பத்துடன் அஜித் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. இதனால் அஜித் 62வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற காலதாமதம் ஆகும் என்கிறார்கள். தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி, அஜித் படத்திற்காக கதை திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.