மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62 வது படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித் குமார் மீண்டும் தனது பைக் சுற்றுபயணத்தை ஆரம்பித்து விட்டார். தற்போது அஜித் குமார் நேபாளத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள பொகாரா என்ற நகரத்தில் அஜித் குமார் பைக்கில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதோடு அங்குள்ள தனது ரசிகர் ஒருவரின் குடும்பத்துடன் அஜித் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. இதனால் அஜித் 62வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற காலதாமதம் ஆகும் என்கிறார்கள். தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி, அஜித் படத்திற்காக கதை திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.




