மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு |
மலையாளத்தில் நேரம், பிரேமம் எனது இரண்டு படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். குறிப்பாக பிரேமம் படம் அவருக்கு தமிழிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெற்று தந்தது. இதற்கிடையே கடந்த வருடம் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கினார் அல்போன்ஸ் புத்ரன். ஆனால் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியது.
இந்த நிலையில் அடுத்ததாக தமிழில் புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் அல்போன்ஸ் புத்ரன். இவர் தனது மூன்று படங்களிலும் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் என்பவருடன் தான் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். ஆனால் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகரான அல்போன்ஸ் புத்ரன் அவ்வப்போது இளையராஜாவின் இசை குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடவும் தவறுவதில்லை.
இந்தநிலையில் சமீபத்தில் இளையராஜாவை சந்தித்ததாக கூறியுள்ள அல்போன்ஸ் புத்ரன், ஏற்கனவே இரண்டு முறை அவரை சந்தித்தபோது புகைப்படம் எடுத்துக்கொள்ள தவறியதால் இந்த முறை மறக்காமல் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறி அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில். வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல தற்போது, தான் பணியாற்றி வரும் படத்தை முடித்தபின் அதற்கு அடுத்த படத்தில் நிச்சயமாக இளையராஜாவின் இசையில் இணைந்து பணியாற்றுவேன் என்றும் கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.