‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து பொன்னின் செல்வன் படக்குழுவினர் சென்னையில் இருந்து துவங்கி ஐதராபாத், மும்பை, டில்லி என முக்கிய நகரங்களில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு சமீபத்தில் கேரளாவிற்கும் வருகை தந்தனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்படி கலந்து கொண்டவர்களில் ஒருவர் நடிகர் டொவினோ தாமஸ் இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விக்ரமை சந்தித்து சில நிமிடங்கள் ஒரு ரசிகராகவே மாறி உரையாடி மகிழ்ந்துள்ளார்.
விக்ரமுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள டொவினோ தாமஸ், அவருடனான சந்திப்பு குறித்து கூறும்போது, “விக்ரம் படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன். அவரது அந்நியன் படத்தை பலமுறை பார்த்துள்ளேன். அதேபோல சினிமாவிற்கு வந்த பிறகு வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்ததிலும், ஏற்ற இறக்கங்களை சந்தித்து அதில் இருந்து மீண்டு வந்தபோதிலும், எப்போதுமே விக்ரம் என் மனதில் இருந்துள்ளார். ஒரு ரசிகனாக அவரை நேரில் சந்தித்து, சில நிமிடங்கள் அவர் அருகில் அமர்ந்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம்” என்று கூறியுள்ளார்.