ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

இந்திய ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுளாகவே பார்க்கப்பட்ட, பாராட்டப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உலக அளவிலும் அதே போன்று பெருமையை பெற்றவர். எந்த ஒரு பிரபலம் என்றாலும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் அதை தவற விட மாட்டார்கள். அப்படி நடிகர் சூர்யா, அவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சமீபத்திய சோசியல் மீடியா சேட்டிங்கின்போது, சச்சினிடம் காட்டி இந்த சந்திப்பு குறித்து கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.
அவருக்கு பதில் அளித்த சச்சின், “நாங்கள் இருவருமே ஆரம்பத்தில் ரொம்பவே கூச்ச சுபாவத்துடன் இருந்தோம். மேலும் ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்ய வேண்டாமே என்றும் விரும்பினோம். ஆனால் போகப்போக அது ஒரு நல்ல உரையாடலாக மாறிய தருணமாக அமைந்தது” என்று கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் சூர்யா சச்சினை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




