22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
இந்திய ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுளாகவே பார்க்கப்பட்ட, பாராட்டப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உலக அளவிலும் அதே போன்று பெருமையை பெற்றவர். எந்த ஒரு பிரபலம் என்றாலும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் அதை தவற விட மாட்டார்கள். அப்படி நடிகர் சூர்யா, அவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சமீபத்திய சோசியல் மீடியா சேட்டிங்கின்போது, சச்சினிடம் காட்டி இந்த சந்திப்பு குறித்து கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.
அவருக்கு பதில் அளித்த சச்சின், “நாங்கள் இருவருமே ஆரம்பத்தில் ரொம்பவே கூச்ச சுபாவத்துடன் இருந்தோம். மேலும் ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்ய வேண்டாமே என்றும் விரும்பினோம். ஆனால் போகப்போக அது ஒரு நல்ல உரையாடலாக மாறிய தருணமாக அமைந்தது” என்று கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் சூர்யா சச்சினை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.