டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

உலக அளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் முதன்மையான விருதாக ஆஸ்கர் விருது இருக்கிறது. இந்தத் தலைமுறைக்குத் தெரியும் விதத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். சிறந்த ஒலிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை வாங்கியவர் ரசூல் பூக்குட்டி. சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதை வாங்கியவர்கள் தயாரிப்பாளர் குனித் மோங்க, இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ்.
இவர்கள் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தயாரிப்பாளர் குனித்மோங்கா பதிவிட்டு, “ஒரே படத்தில் 5 ஆஸ்கர்ஸ்' என்று குறிப்பிட்டுள்ளார். அப்புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
அப்புகைப்படத்தைப் பார்க்கும் போது ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்களும்தான் எனப் புரிகிறது. சிறந்த டாகுமென்டரி குறும்படமான 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படத்தை குனித் மோங்கா தயாரிக்க கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கியிருந்தார். ரகுமான், ரசூல் பூக்குட்டியுடன் இரண்டு பெண்களும் இணைந்து நின்றிருப்பதைப் பார்த்து பெண்களும் பெருமைப்பட வேண்டும்.




