'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
உலக அளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் முதன்மையான விருதாக ஆஸ்கர் விருது இருக்கிறது. இந்தத் தலைமுறைக்குத் தெரியும் விதத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். சிறந்த ஒலிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை வாங்கியவர் ரசூல் பூக்குட்டி. சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதை வாங்கியவர்கள் தயாரிப்பாளர் குனித் மோங்க, இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ்.
இவர்கள் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தயாரிப்பாளர் குனித்மோங்கா பதிவிட்டு, “ஒரே படத்தில் 5 ஆஸ்கர்ஸ்' என்று குறிப்பிட்டுள்ளார். அப்புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
அப்புகைப்படத்தைப் பார்க்கும் போது ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்களும்தான் எனப் புரிகிறது. சிறந்த டாகுமென்டரி குறும்படமான 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படத்தை குனித் மோங்கா தயாரிக்க கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கியிருந்தார். ரகுமான், ரசூல் பூக்குட்டியுடன் இரண்டு பெண்களும் இணைந்து நின்றிருப்பதைப் பார்த்து பெண்களும் பெருமைப்பட வேண்டும்.