பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
கடந்த வருடம் வெளியான முதல் பாகத்தில் படத்தின் ஆரம்பத்தில் சோழர்களைப் பற்றிய அறிமுகத்திற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். இரண்டாம் பாகத்திலும் அவரது பின்னணிக் குரலுடன்தான் படம் ஆரம்பமாக உள்ளது. இது பற்றிய தகவலை நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மணிரத்னம் தெரிவித்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தான் அடுத்து நடிக்க உள்ளார். 'இந்தியன் 2' படப்பிடிப்பு முடிந்த பிறகு அப்படம் ஆரம்பமாக உள்ளது. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
ரஜினியை இயக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் அதுவும் மகிழ்ச்சிதான் என்றும் மணிரத்னம் நேற்று கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் கூறியிருந்தார்.