ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்கிற பீரியட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முண்டந்துறை வனப்பகுதிகளில் நடைபெற்று வந்தது. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது தற்காலிகமாக இந்த படத்தின் படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை நேரில் வந்து கண்டு களித்தார் தனுஷ். அவருடன் அவரது இளைய மகன் லிங்காவும் வந்திருந்தார். அதேசமயம் உள்ளூரில் இருந்த நடிகர் சிவராஜ்குமாரும் இந்த கிரிக்கெட் போட்டியை காண வந்தவர், நடிகர் தனுஷுடன் அமர்ந்து இந்த போட்டியை கண்டு ரசித்தார்