ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்கிற பீரியட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முண்டந்துறை வனப்பகுதிகளில் நடைபெற்று வந்தது. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது தற்காலிகமாக இந்த படத்தின் படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை நேரில் வந்து கண்டு களித்தார் தனுஷ். அவருடன் அவரது இளைய மகன் லிங்காவும் வந்திருந்தார். அதேசமயம் உள்ளூரில் இருந்த நடிகர் சிவராஜ்குமாரும் இந்த கிரிக்கெட் போட்டியை காண வந்தவர், நடிகர் தனுஷுடன் அமர்ந்து இந்த போட்டியை கண்டு ரசித்தார்




