சூர்யா 45 படத்தில் இணைந்த இளம் நடிகை | தனுஷ் 56வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | வெளிநாடு சென்றாலும் கையோடு குக்கர் எடுத்துச் செல்லும் ராம்சரண்: மனைவி தகவல் | காதலியின் மகள் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய நடிகர் தர்ஷன் | அரபு நாடுகளில் மரண மாஸ் திரைப்படம் வெளியாக தடை | 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த பிரித்விராஜ் - பார்வதி | கண்ணப்பாவுக்காக உ.பி முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரபுதேவா, விஷ்ணு மஞ்சு | அல்லு அர்ஜுன் ஸ்டைலை பின்பற்றி ராம் சரண், அகில் | இலங்கையில் சிக்கித் தவிக்கும் 'பராசக்தி' பணியாளர்கள் | ஓடிடி இழுபறியில் வீர தீர சூரன் |
தமிழ் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த விஜய் வாரிசு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நேரடியாக என்ட்ரி கொடுத்தார். வம்சி இயக்கிய இந்த படம் வாரிசுடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். சமீபத்தில் கடந்தபோன பொங்கலுக்கு வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இந்த நிலையில் அடுத்தபடியாக அட்லீ இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் தெலுங்கில் கிராக், வீரசிம்ஹா ரெட்டி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கோபிசந்த் மலினேனி, விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறாராம். அந்த கதை விஜய்க்கு பிடித்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு கோபி சந்தை பொறுத்தவரை ஹீரோக்களை மாஸாக காட்டக் கூடியவர் என்பதால் அவர் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.