ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான படம் பிச்சைக்காரன். நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை சசி இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகத்தை கொண்டு வர விஜய் ஆண்டனி விரும்பினார். ஆனால் சசி இயக்க மறுத்துவிடவே தானே இயக்க முடிவு செய்தார். தற்போது இந்த படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு தடைகோரி மாங்காடு மூவீஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராஜகணபதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “நான் தயாரித்த 'ஆய்வுகூடம்' என்ற படத்தின் கருவையும், வசனத்தையும் பயன்படுத்தி பிச்சைக்காரன் 2 படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக கொடுத்த பிறகே படத்தை வெளியிட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு விஜய் ஆண்டனிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 12ம் தேதிக்கு தள்ளி வைத்தது.