பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், தமன்னா, யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ரப் அண்ட் டப்பான ஜெயிலர் வேடத்தில் நடித்து வரும் ரஜினி, சண்டை காட்சிகளில் பெரிய அளவில் அதிரடி காட்டி இருப்பதாக அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அவர் கூறுகையில், ஜெயிலர் படத்தின் அனைத்து சண்டைக் காட்சிகளுமே சிறப்பாக வந்துள்ளது. அதிலும் இந்த படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் இந்த ஜெயிலர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிகவும் ஆக்டிவாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் அவர் காட்டிய ஈடுபாடு வியப்பாக இருந்தது. அதனால் ஜெயிலர் படத்தின் சண்டை காட்சிகள் ரஜினி ரசிகர்களை பெரிய அளவில் கவரக்கூடியதாக இருக்கும் என்று ஸ்டண்ட் சில்வா தெரிவித்திருக்கிறார்.