என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். திருமணம் ஆகி ஒரு குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் நடித்து வரும் காஜல் தற்போது ‛இந்தியன் 2' திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது, ‛‛ஹிந்தி தான் எனது தாய்மொழி. ஹிந்தி திரைப்படங்களை தான் பார்த்து வளர்ந்தேன். ஆனால் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு, ஹிந்தி திரையுலகில் குறைவு என்றே கருதுகிறேன். அதனால் தான் ஹிந்தியை விட்டுவிட்டு தென்னிந்திய சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். ஏராளமானவர்கள், தங்கள் திரை வாழ்க்கையை ஹிந்தியில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கான காரணம் உலகளவில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் தான். இங்கு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் தனித்துவமான திரைப்படங்கள் வருகின்றன.” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.