தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
கவுதம் கார்த்திக் நடித்துள்ள 1947 ஆகஸ்ட் 16 படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது “ ஏ. ஆர் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் தான் ஸ்கிரிப்ட் பணிகளை செய்தேன். அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸின் தயாரிப்பில் வெளிவந்த 'எங்கேயும் எப்போதும்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினேன். இதையடுத்து அவர் தயாரித்த 'மான் கராத்தே' படத்தில் கதாநாயகனாக நடித்தேன். இன்று அவரது '1947 ஆகஸ்ட் 16' படத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன். ஆனால் இன்னும் அடுத்த கட்டம் உள்ளது அது விரைவில் நடக்கும்" என கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் 25வது படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார் எனும் செய்தி சமூக வளைதளங்களில் பரவி வந்தது. அந்த படத்தை பற்றி தான் மறைமுகமாக கூறியுள்ளார் என்பது அவரது பேச்சிலும், விழாவில் கலந்து கொண்டதிலும் உறுதியாகியுள்ளது. இந்த படத்தை தாகூர் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.