சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் படமாக அறிவிக்கப்பட்ட படம் வணங்கான். இந்த படத்தை சூர்யா தயாரித்து, அவரே நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது. சில நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்று அவரும் நடித்து வந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதத்தில் இந்த படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாக பாலா அறிவித்தார். தற்போது இப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் பாலா.
இத்திரைப்படத்திற்காக கேரளாவில் இருந்து சில துணை நடிகைகளை அழைத்து வந்துள்ளார் ஜிதின் என்கிற ஒருங்கிணைப்பாளர். துணை நடிகைகளில் ஒருவரான லிண்டா, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் “வணங்கான் படத்தில் 3 நாட்கள் நடிக்க மொத்தமாக 22 ஆயிரத்து 600 ரூபாய் பேசினார்கள். ஆனால் சொன்னபடி அந்த தொகையை கொடுக்கவில்லை. அதை எதிர்த்து கேட்டதற்கு அடித்து உதைக்கிறார்கள்” என புகார் தெரிவித்துள்ளார்.