முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் | 20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் ஐஸ்வர்யா வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், நவரத்தின கல் ஆகியவை திருடு போய்விட்டதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதை தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதை குறித்து ஈஸ்வரியிடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைகள் மீட்புஇந்த நிலையில் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுனர் வெங்கடேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுளனர். இவர்களின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதியானது. ஈஸ்வரியிடம் போலீஸ் நடத்தி வந்த விசாரணையில் கார் ஓட்டுனர் வெங்கடேஷ் உதவியோடு சிறிது சிறிதாக சுமார் 100 பவுன் வரை தங்க நகைகள் திருடி உள்ளார்கள். இது அல்லாமல் 30 கிராம் டைமண்ட், வீட்டு பத்திரம், 4 கிலோ வெள்ளி ஆகியவை கைப்பற்றியுள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.