பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சில நாட்களுக்கு முன்பு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் காலேவின் அழைப்பை ஏற்று, ரஜினிகாந்த் தனது மனைவி லதா உடன் கிரிக்கெட் போட்டியை காண வந்திருந்தார்.
இந்த தகவல் வைரலானது. ஆனால் வெளியில் தெரியாத இன்னொரு தகவலும் உண்டு. அது இளம் கிரிக்கெட் வீரர்கள் ரஜினியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது தான். தற்போது அந்த படங்களை வெளியிட்டிருப்பதால் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ரஜினியை சந்தித்துள்ளனர். ரஜினியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, "ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தலைவர்" என்று கூறியுள்ளார் குல்தீப் யாதவ்.
இதேபோல், வாஷிங்டன் சுந்தர், இன்ஸ்டாகிராமில் அவர் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "இது எப்டி இருக்கு" என்று பதிவிட்டுள்ளார்.