பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கல்கி எழுதிய சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் அதேபெயரில் படமாகி, கடந்தாண்டு முதல்பாகம் வெளியானது. மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரூ.500 கோடி வசூல் சாதனை புரிந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்., 28ல் திரைக்கு வருகிறது. தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. புரொமோஷன் பணிகள் துவங்கி உள்ளன.
முதற்கட்டமாக ‛அக நக' என்ற முதல் பாடலை இன்று மார்ச் 20ல், மாலை வெளியிட்டனர். இளங்கோ கிருஷ்ணன் இந்த பாடலை எழுத, சக்திஸ்ரீ கோபாலன் பாடி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பொன்னியின் செல்வன் முதல்பாகத்தில் இந்த பாடலின் தொகுப்பு வெளியானது. தற்போதை அதையே முழுநீள பாடலாக வெளியிட்டுள்ளனர். அழகிய தமிழ் சொற்கள் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த பாடல் வந்தியவன் கார்த்தி - குந்தவை திரிஷா இடையேயான காதலை வெளிப்படுத்தும் பாடலாக வெளியாகி உள்ளது. பாடல் வெளியான 45 நிமிடங்களில் 3.15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன. தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இந்த பாடல் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது.