ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் | இரவு 12மணிக்கு மிஷ்கினுக்கு ஐ லவ் யூ சொன்ன இயக்குனர் | 2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1' | எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் '3' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நாயகர்களாக நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் லாக்கரில் வைத்திருந்த 60சவரன் தங்க மற்றும் வைர நகைகள், நவரத்தின கல் ஆகியவை திருடு போய்விட்டதாக சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துளார். கடந்த மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. அதுகுறித்த தகவல் இப்போது தான் தெரிய வந்துள்ளது. போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.