24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் | இசை அமைப்பாளர் பயணம் தொடரும் : சக்திஸ்ரீ கோபாலன் | கரம் மசாலா : விமல், யோகி பாவுவின் காமெடி படம் | பிளாஷ்பேக் : ரஜினி கேட்டும் கிளைமாக்ஸை மாற்றாத மகேந்திரன் |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், சிறப்பு வேடத்தில் மோகன்லால், யோகி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சற்று ஓய்வில் உள்ள ரஜினி தற்போது மும்பையில் முகாமிட்டுள்ளார். நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல்ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று ரசித்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் ரஜினி சந்தித்து பேசி உள்ளார். இது தொடர்பான போட்டோவை ஆதித்யா தாக்கரே தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருவரின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே, இருவரும் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்கிறார்கள்.