ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
95வது ஆஸ்கர் விருதில் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதை தமிழில் தயாரான 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற படம் பெற்றது. தமிழகத்தில் உள்ள முதுமலை தேசியப்பூங்காவில் யானைகளை வளர்க்கும் தம்பதிகளான பொம்மன், பெல்லி ஆகியோர் அந்த டாகுமென்டரியில் இடம் பெற்றிருந்தார்கள். அனாதையாக வந்த யானைக்குட்டிகளை அந்தத் தம்பதியினர் எப்படி வளர்க்கிறார்கள் என்பது பற்றியதுதான் அந்த டாகுமென்டரி படம்.
பெண் இயக்குனரான கார்த்திகி கொன்சால்வெஸ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த டாகுமென்டரியில் நடித்திருந்த பொம்மன், பெல்லி இருவரும் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினை இன்று(மார்ச் 15) சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார் முக ஸ்டாலின். அதோடு இருவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் பரிசளித்தார். அப்போது தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.