சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
95வது ஆஸ்கர் விருதில் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதை தமிழில் தயாரான 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற படம் பெற்றது. தமிழகத்தில் உள்ள முதுமலை தேசியப்பூங்காவில் யானைகளை வளர்க்கும் தம்பதிகளான பொம்மன், பெல்லி ஆகியோர் அந்த டாகுமென்டரியில் இடம் பெற்றிருந்தார்கள். அனாதையாக வந்த யானைக்குட்டிகளை அந்தத் தம்பதியினர் எப்படி வளர்க்கிறார்கள் என்பது பற்றியதுதான் அந்த டாகுமென்டரி படம்.
பெண் இயக்குனரான கார்த்திகி கொன்சால்வெஸ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த டாகுமென்டரியில் நடித்திருந்த பொம்மன், பெல்லி இருவரும் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினை இன்று(மார்ச் 15) சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார் முக ஸ்டாலின். அதோடு இருவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் பரிசளித்தார். அப்போது தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.