ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
நடிகர் தர்ஷன் தமிழில் ரஜினி முருகன், கனா, தும்பா, துணிவு ஆகிய படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்திருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானர். தர்ஷனுக்கு ஏராளமான பெண் ரசிகைகளும் உள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தர்ஷன் என நினைத்து சோஷியல் மீடியா போலி ஐடியில் ஒருவருடன் பேசி வந்துள்ளார். அவர்களின் நட்பு படிப்படியாக வளர்ந்து வாட்ஸ்அப் வரை சென்றுள்ளது.
தர்ஷன் தான் என நினைத்த அந்த பெண் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். ஆனால், அதன்பிறகு அந்த பெண்ணின் புகைப்படங்களை மார்ப் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் எனக் கூறி 2லட்சம் ரூபாய் பணம் கேட்டு மோசடிக்காரன் மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து அந்த பெண்ணும் பணத்தை கொடுத்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து மிரட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் விசாரனையை தொடங்கிய போலீசார், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அலாவுதீன், வாகித் என்பவர்கள் தான் அந்த போலி ஐடியை உருவாக்கியதை கண்டுபிடித்துள்ளனர். சகோதரர்களான இவர்கள், அந்த போலி ஐடியின் மூலம் அந்த பெண்ணிடம் மாறி மாறி பேசி பணம் மோசடி செய்துள்ளனர் என்பதும் விசாரனையில் தெரியவந்தது. இதனையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.