'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ராம் சரணின் 15வது படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். பான் இந்திய படமாக உருவாகி வரும் இப்படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. அரசியல் கலந்த ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக வெளியாக உள்ளது. அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தெலுங்கு சினிமா முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்தின் அடுத்த அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் 20ம் தேதி தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் ராம்சரண், கியாரா அத்வானி வைத்து ஒரு பாடலை பிரமாண்டமாக படமாக்க ஷங்கர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்காக கலை இயக்குநர் அவினாஷ் கொல்லா இயக்கத்தில் ஐதராபாத்தில் பிரமாண்ட செட் தயாராகி வருகிறது. இப்பாடல் சுமார் பத்து கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் பட பாணியில் இந்த பாடல் கலக்கலாக இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் பாடலின் படப்பிடிப்பு சுமார் பத்து நாட்கள் நடைபெற உள்ளதாம்.
படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை வரும் மார்ச் 27ம் தேதி ராம்சரண் பிறந்தநாளில் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.