ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' | சென்னையில் நடந்த 80ஸ் நடிகர், நடிகைகள் ரீ யூனியன் | அரச கட்டளை, தளபதி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஞாயிறு திரைப்படங்கள் | இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' |
சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள 'பத்து தல' படம் இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கடுத்து அவர் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது. நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அப்படத்தை தயாரிக்க உள்ளது. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை 6.30க்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இன்றைய அறிவிப்பு பற்றி நேற்றே டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் படத் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அவர்களது 6வது தயாரிப்பு பற்றிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என சற்று முன் அறிவித்துள்ளார்கள். இது சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படமா அல்லது தயாரிக்கும் படமா என்பது அறிவிப்பு வரும் போது தெரியும்.
சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. அதற்கடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படம் ஆரம்பிப்பதற்குள் அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவாரா என்பது சந்தேகம்தான்.