இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க 'வாடிவாசல்' படம் தயாராகும் என 2021ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டில் படத்தின் டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டார்கள். அப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாகியும் இன்னும் ஆரம்பமாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
கடந்த வருடம் இப்படத்திற்கான டெஸ்ட் ஷுட்களைக் கூட நடத்தினார்கள். படத்திற்காக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை சூர்யா சொந்தமாக வாங்கி வளர்க்கிறார் என்றும் தகவல் வெளியானது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிமாறன் 'விடுதலை' படத்திற்காக மட்டுமே பணிபுரிந்து வந்தார். அப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
நேற்று அப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய வெற்றிமாறன், 'விடுதலை படத்தின் இரண்டு பாகங்கள் வெளியானதும் 'வாடிவாசல்' படத்தை ஆரம்பிக்க உள்ளோம். அதற்குப் பிறகு 'வட சென்னை 2' படத்தை இயக்குவேன்,” என அறிவித்தார்.
மார்ச் மாதம் 30ம் தேதி 'விடுதலை' படத்தின் முதல் பாகம் வெளியாக உள்ளது. அதற்குப் பின் ஆறு மாதங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகலாம். எப்படியும் இந்த வருட இறுதிக்குள் 'வாடிவாசல்' ஆரம்பமாக வாய்ப்புள்ளது. படம், இரண்டு வருடங்களாகியும் ஆரம்பமாகாமல் இருப்பதால் புதிய அப்டேட்டைக் கேட்டு சூர்யா ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.