பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் | காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? |
1989ம் ஆண்டு பார்த்திபன் இயக்கி, நடித்து வெளியான படம் ‛புதிய பாதை'. திரையுலகில் பார்த்திபனுக்கு புதிய அடையாளத்தையும், புதிய பாதையையும் ஏற்படுத்தி தந்த படம் இது. 34 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்கப் போகிறார் பார்த்திபன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛புதிய பாதை படம் எப்போதுமே என் மனதுக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு படமாகும். அதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்கப் போகிறேன். அதையடுத்து தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர் தியாகராஜ பாகவதரின் படத்தை இயக்குவதற்காக ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி சிறை சென்ற நிலையில் அந்த கொலை வழக்கு குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறேன். இது குறித்த முழு தகவல்களை திரட்டியதும் அந்த படத்தை தொடங்குவேன். அதற்காக சில ஆண்டுகள் ஆகலாம்'' என்று தெரிவித்திருக்கிறார் பார்த்திபன்.