இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

1989ம் ஆண்டு பார்த்திபன் இயக்கி, நடித்து வெளியான படம் ‛புதிய பாதை'. திரையுலகில் பார்த்திபனுக்கு புதிய அடையாளத்தையும், புதிய பாதையையும் ஏற்படுத்தி தந்த படம் இது. 34 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்கப் போகிறார் பார்த்திபன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛புதிய பாதை படம் எப்போதுமே என் மனதுக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு படமாகும். அதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்கப் போகிறேன். அதையடுத்து தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர் தியாகராஜ பாகவதரின் படத்தை இயக்குவதற்காக ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி சிறை சென்ற நிலையில் அந்த கொலை வழக்கு குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறேன். இது குறித்த முழு தகவல்களை திரட்டியதும் அந்த படத்தை தொடங்குவேன். அதற்காக சில ஆண்டுகள் ஆகலாம்'' என்று தெரிவித்திருக்கிறார் பார்த்திபன்.




