கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
தயாரிப்பாளர் வி. ஏ. துரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். என்னம்மா கண்ணு, பிதாமகன், லூட்டி, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ரஜினியின் பாபா படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். மனைவி, மகளை பிரிந்து வாழும் அவர் தற்போது விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார்.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உதவியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் எழுந்து உட்காரும் அளவிற்கு உடல்நலம் தேறியிருக்கிறார். ஆனால் தற்போது அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணமில்லாமல் தவித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு நடிகர் சூர்யா ரூ 2 லட்சம் பணம் கொடுத்து உதவியதாக தகவல் வெளியானது. அதேபோல நடிகர் கருணாஸ் ரூ 50 ஆயிரம் பணம் கொடுத்து உதவியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவரை போனில் தொடர்பு கொண்டு "நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாதிருங்கள். மொத்த செலவையும் நான் பார்த்து கொள்கிறேன். ஜெயிலர் படத்தை முடித்ததும் நேரில் வந்து பார்க்கிறேன்'' என உறுதி அளித்துள்ளாராம். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.