வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல நடிப்பில் உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் அடுத்து இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவையும் இம்மாதம் 29ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்தப்போகிறார்கள்.
இப்படத்தின் முதல் பாக இசை விழாவில் ரஜினி - கமல் கலந்து கொண்ட நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் இசை விழாவிலும் ரஜினியும், கமலும் பங்கேற்க உள்ளார்கள். மேலும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பொன்னியின் செல்வன் படக்குழு இந்தியா முழுக்க சென்று படத்தை விளம்பரப்படுத்தும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.




