டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு ஓடிடியில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. 1975ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையாக அப்படம் வெளிவந்தது.
நேற்று திடீரென 'சார்பட்டா பரம்பரை' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் என்ற அறிவிப்பு வெளியானது. இப்படி ஒரு அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. பா.ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது.
ஆனால், அதற்குள்ளாக 'சார்பட்டா பரம்பரை 2' படத்தை இயக்கி முடிப்பார் எனத் தெரிகிறது. கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் வரை நடக்கும் என்கிறார்கள். பா ரஞ்சித் இயக்கி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாம். கமல்ஹாசன் வரும் வரை காத்திருக்காமல் அதற்குள் 'சார்பட்டா பரம்பரை 2' படத்தை இயக்கி முடிக்க ரஞ்சித் திட்டமிட்டுள்ளாராம்.
முதல் பாகத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள். அப்போது கொரோனா தாக்கம் இருந்ததால் அப்படி நடந்தது. அப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் பெரும் வசூலைக் குவித்திருக்கும் என்று சொல்லப்பட்டது. இப்போது இரண்டாம் பாகத்தை தியேட்டர்களில்தான் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.