எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகும்வரை நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்தார். 2015ம் ஆண்டு வெளியான '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அதன்பிறகு மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக 'காதல்: தி கோர்க்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்குவர உள்ளது. ஹிந்தியில் 'ஶ்ரீ' என்ற படத்தில் ராஜ்குமார் ராவுடன் நடிக்கிறார். இந்த நிலையில் அடுத்து ஹிந்தியில் 'தாபா கார்டல்' என்ற பெயரில் உருவாகும் வெப் தொடரில் நடிக்க இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதில் ஜோதிகாவுடன் ஷபானா ஆஸ்மி, சுஜ்ராஜ் ராவ் ஆகியோரும் நடிக்கின்றனர். சோனாலி போஸ் இயக்குகிறார். 5 குடும்ப பெண்களை மையமாக வைத்து இந்த தொடர் தயாராகிறது. படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ஹிந்தி படங்கள், தொடர்களில் நடிப்பதால் ஜோதிகா மும்பையில் உள்ள தங்களது பூர்வீக வீட்டில் தங்கி உள்ளார்.