கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகும்வரை நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்தார். 2015ம் ஆண்டு வெளியான '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அதன்பிறகு மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக 'காதல்: தி கோர்க்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்குவர உள்ளது. ஹிந்தியில் 'ஶ்ரீ' என்ற படத்தில் ராஜ்குமார் ராவுடன் நடிக்கிறார். இந்த நிலையில் அடுத்து ஹிந்தியில் 'தாபா கார்டல்' என்ற பெயரில் உருவாகும் வெப் தொடரில் நடிக்க இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதில் ஜோதிகாவுடன் ஷபானா ஆஸ்மி, சுஜ்ராஜ் ராவ் ஆகியோரும் நடிக்கின்றனர். சோனாலி போஸ் இயக்குகிறார். 5 குடும்ப பெண்களை மையமாக வைத்து இந்த தொடர் தயாராகிறது. படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ஹிந்தி படங்கள், தொடர்களில் நடிப்பதால் ஜோதிகா மும்பையில் உள்ள தங்களது பூர்வீக வீட்டில் தங்கி உள்ளார்.