மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
இடையில் அவ்வப்போது இந்தப் படத்தின் வெளியீடு குறித்த சந்தேகங்களை சிலர் வெளியிட்டு வீண் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக படக்குழுவினர் இப்போதே புரமோஷனை ஆரம்பித்துவிட்டனர்.
நேற்று விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் படம் பற்றிப் பேசிய ஒரு நிமிட முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டனர். நேற்று வெளியான அந்த வீடியோவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் படம் பற்றிய எதிர்பார்ப்பு இப்போதே ஆரம்பமாகிவிட்டது. இந்த வருட கோடை விடுமுறையில் இப்படம் வெளியாவதால் முதல் பாகத்தை விடவும் அதிகமான வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.