தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சூர்யா தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார் . இதை சிவா இயக்குகிறார். சரித்திரமும், நிகழ்காலம் கலந்த கதையில் இந்தப்படம் உருவாகிறது. இதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் சூர்யா.
தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பிஸ்கட் நிறுவனத்தின் அதிபர் ராஜன் பிள்ளையின் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க எண்ணி உள்ளனர். இதில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை நடிகர் மற்றும் இயக்குனர் ப்ரிதிவிராஜ் இயக்குகிறார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் சூர்யா மற்றும் ப்ரிதிவிராஜ் ஆகியோரின் இரு குடும்பங்களும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடதக்கது.