குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
நடிகர் சூர்யா தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார் . இதை சிவா இயக்குகிறார். சரித்திரமும், நிகழ்காலம் கலந்த கதையில் இந்தப்படம் உருவாகிறது. இதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் சூர்யா.
தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பிஸ்கட் நிறுவனத்தின் அதிபர் ராஜன் பிள்ளையின் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க எண்ணி உள்ளனர். இதில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை நடிகர் மற்றும் இயக்குனர் ப்ரிதிவிராஜ் இயக்குகிறார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் சூர்யா மற்றும் ப்ரிதிவிராஜ் ஆகியோரின் இரு குடும்பங்களும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடதக்கது.