ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை |

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த படம் 'வாரிசு'. ஜனவரி 11ம் தேதி வெளிவந்த அப்படத்திற்கான பத்திரிகையாளர் காட்சியை ஒரு நாள் முன்னதாக ஜனவரி 10ம் தேதி இரவே சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் திரையிட்டனர். நெகட்டிவ்வான விமர்சனங்கள் அதிகம் வராமல் குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற விமர்சனம் வந்ததால் அந்தப் படம் பெரும் நஷ்டத்திலிருந்து தப்பித்தது.
அந்தப் படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்டவர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார். அவர் இப்போது தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிடுகிறார். நாளை அப்படம் வெளியாக உள்ள நிலையில் 'வாரிசு' படத்தைப் போலவே இன்று இரவே சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் பத்திரிகையாளர் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். ஆனால், 'வாரிசு' படம் போல குடும்பத்தினருடன் பார்க்க அனுமதி இல்லை, பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என கட்டுப்பாடு விதித்துவிட்டார்கள்.
'வாரிசு, வாத்தி' இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு படங்களையும் தமிழில் ஒரே தயாரிப்பாளரே வாங்கி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'வாரிசு' வழியில் 'வாத்தி' செல்கிறார், என்ன நடக்கப் போகிறது என்பது நாளைக்குத் தெரிந்துவிடும்.




