இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பாகம் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சார்பில் கல்கியின் அறக்கட்டளைக்கு மணிரத்னம் ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.
இந்த நிலையில். “கல்கி : பொன்னியின் செல்வர்”என்ற தலைப்பில் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையாளர் எஸ்.சந்திர மௌலி எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார். கல்கியின் பேத்திகளான சீதா ரவி, லட்சுமி நடராஜன் பெற்றுக் கொண்டனர்.
இது குறித்து மணிரத்னம் கூறும்போது “அமரர் கல்கியின் எழுத்துக்கள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பினைப் பெற்று, இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமானது”என்றார்.




