7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பாகம் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சார்பில் கல்கியின் அறக்கட்டளைக்கு மணிரத்னம் ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.
இந்த நிலையில். “கல்கி : பொன்னியின் செல்வர்”என்ற தலைப்பில் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையாளர் எஸ்.சந்திர மௌலி எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார். கல்கியின் பேத்திகளான சீதா ரவி, லட்சுமி நடராஜன் பெற்றுக் கொண்டனர்.
இது குறித்து மணிரத்னம் கூறும்போது “அமரர் கல்கியின் எழுத்துக்கள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி. பொன்னியின் செல்வன்  திரைப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பினைப் பெற்று, இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமானது”என்றார்.