பிளாஷ்பேக்: அறச்சொல் பாடி, தோல்வியை சந்தித்த எம் ஜி ஆரின் “தலைவன்” | தமிழில் மிகவும் சுமாரான முன்பதிவில் 'குபேரா' | 'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி | பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் | சிவகார்த்திகேயன் 24வது படம் : இயக்குனர் யார்? | பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | ஐடி., ரெய்டு நடக்கும் உணவகம் என்னுடையது அல்ல : ஆர்யா பேட்டி | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா |
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கி வரும் ஜவான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ளார் நயன்தாரா. கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் நடைபெற்றபோது அதில் நேரில் வந்து கலந்து கொண்டார் ஷாருக்கான். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அப்போதே தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் ஷாருக்கான்.
இந்தநிலையில் சென்னை எக்மோரில் உள்ள நயன்தாராவின் அபார்ட்மெண்டுக்கு நேரில் வருகை தந்து அவரது குழந்தைகளை பார்த்ததுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் மீண்டும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் ஷாருக்கான். நயன்தாராவின் அபார்ட்மெண்ட்டுக்கு ஷாருக்கான் வந்ததும், அவரை வரவேற்க நயன்தாரா வாசலுக்கே வந்ததுமான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.