Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

'டூரிங் டாக்கிஸ்' காயத்ரி ரேமா

12 பிப், 2023 - 13:22 IST
எழுத்தின் அளவு:
Gayathri-Rema-Exclusive-Interview

'டூரீங் டாக்கிஸ்' மூலம் ரசிகர்கள் மனம் கவர்ந்த 'கேரளத்து பைங்கிளி' நடிகை காயத்ரி ரேமா, நடிப்பிலும் நாட்டியத்திலும் ஒருங்கே சாதித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி...

நீங்கள் நாட்டியத்தில் சாதிப்பது எப்படி
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தேன். பள்ளி படிப்பை மும்பையில் முடித்தேன். நான் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. 13 வயதில் அரங்கேற்றம் செய்தேன். சென்னைக்கு கல்லுாரி படிப்பிற்கு வந்ததும் தனஞ்செயனிடம் 6 மாதம் பயிற்சி பெற்றேன். மும்பை, சென்னை, கேரளாவில் பல மேடைகளில் பரதம் ஆடியுள்ளேன்.
திரைத்துறை பயணம் எப்படி ஏற்பட்டது...
சென்னையில் பி.டெக்., படிக்கும் போதே, கல்லுாரியில் இருந்த விஷூவல் கம்யூனிகேஷன் துறைக்கு குறும்படங்கள் தயாரித்து கொடுத்தேன். கல்லுாரி நிகழ்ச்சிக்கு வந்த பல திரைப்பட இயக்குனர்கள் என்னை நடிக்க அழைத்ததற்கு இதுவே காரணம். அப்போது நடந்த 'ஆடிஷனில்' தான் இயக்குனர் எஸ்.ஏ., சந்திரசேகரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது 'டூரீங் டாக்கிஸ்' படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.
இது வரை வெளியான படங்கள் எத்தனை
இது வரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அதில் 15 படங்கள் ரிலீஸ் ஆனது. நான் நடிக்க உறுதுணையாக மாஸ்டர் மணி, நடிகர் ரஞ்சித் இருந்தனர். எனக்கு அதிகம் பிடித்தவர் சித்தார்த். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் எனக்கு பின்னணி பாடகர், 'டப்பிங் ஆர்டிஸ்ட்' வாய்ப்பு கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன். அனைத்து இயக்குனரிடமும் நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. குறிப்பாக தமிழ் திரைப்பட இயக்குனர் சசி, கேரளா இயக்குனர் பேஸில் ஜோசப் போன்றவர்கள் படத்தில் நடிக்க ஆர்வம் அதிகம். நான் தெலுங்கு உட்பட 6 மொழிகளில் 'டப்பிங்' கொடுக்கிறேன்.
பெற்ற விருதுகள்...
2018 ல் 'குறும்படத்திற்கு' விருது, 'சைமா' விருதுகளை பெற்றுள்ளேன். சிவகங்கை நகராட்சி தலைவர் சி.எம். துரைஆனந்த் தயாரிப்பில் வெளியாக உள்ள 'விழித்தெழு' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். சமூக வலைதளத்தில் நடக்கும் அவலங்களை தட்டிக்கேட்டு, தடுக்கும் கேரக்டரை செய்துள்ளேன். மாற்றுத்திறனாளி, கண் பாதித்தவர், இரட்டை வேடங்கள் என நடிக்க ஆசை.
நீங்கள் பூனைகள் வளர்க்கிறீர்களாமே...
வீட்டில் ஆசையாக பூனைகள் வளர்த்தேன். அவை நன்கு வளர்ந்து 50 குட்டிகள் வரை போட்டது. வீட்டில் அதிகளவில் வளர்த்ததால், சென்னையில் வீட்டு உரிமையாளரின் எதிர்ப்பை சந்தித்தோம். என்றாலும் பூனை பாசம் போகவில்லை.
இவரை பாராட்ட gayatri.rema@gmail.com

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கதையே வாகை  சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதிகதையே வாகை சூடும் : 'வீரமே வாகை ... 'டெஸ்ட் மேட்ச்' போல நடிகர்களை கதாபாத்திரம் வடிவமைக்கும்! நடிகர் அஜித்கோஷி நம்பிக்கை 'டெஸ்ட் மேட்ச்' போல நடிகர்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in