‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தென்கொரியாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சீனுராமசாமியின், நீர்ப்பறவை படம் தேர்வாகியுள்ளது. கூடல்நகர், தென்மேற்கு பருக்காற்று போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் சீனுராமசாமி, சமீபத்தில் இயக்கி வெளிவந்த படம் நீர்ப்பறவை. விஷ்ணு, சுனைனா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் ஒரு அழகான காதல் கதையுடன், இலங்கை கடற்படையிரனால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதையும் சொல்லியிருந்தார் டைரக்டர் சீனு ராமசாமி. வசூல் ரீதியாக சாதனை படைக்காவிட்டாலும் அனைவரும் பாராட்டும்படியாக இப்படம் அமைந்தது.
இந்நிலையில் இப்படம் தென்கொரிய திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது. தென்கொரியாவில் ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஜியோன்ஜூ திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதில் நீர்ப்பறவை படம் திரையிடப்பட இருக்கிறது. இதுகுறித்து இவ்விழாவுக்கான அதிகாரி நிரூபமா சந்தோஷ் கூறியிருப்பதாவது, இந்தி அல்லாத பிறமொழி படங்களுக்கான பட்டியலில் சீனுராமசாமியின் நீர்ப்பறவை படம் தேர்வாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
தென்கொரிய படவிழாவில் நீர்ப்பறவை படம் தேர்வாகி இருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று கூறியுள்ளார்.