ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மீடியாக்களின் வருகை, குறிப்பாக யு-டியூப் சேனல்களின் ஆதிக்கம் பெருகிய பின்பு, தியேட்டர்களில் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, படம் பார்த்துவிட்டு வரும் பார்வையாளர்களிடம் படம் குறித்த அவர்களது கருத்துக்களை, விமர்சனங்களை கேட்டு அவற்றை தங்களது சேனல்களில் ஒளிபரப்பி வருகின்றனர். இதனால் நல்ல படங்களுக்கு பிரச்சனை இல்லை. அதேசமயம் மிகவும் எதிர்பார்க்கப்படும் பல படங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் தவறான கோணத்தில் அந்த படத்தை பற்றி விமர்சனங்கள் வெளியாவதால் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து கேரள தயாரிப்பாளர்கள் சங்கம் திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது இதுபோன்ற மீடியாக்கள், யு-டியூப் சேனல்கள் தியேட்டருக்குள் நுழைந்து படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களிடம் கருத்து கேட்பதற்கு அதிரடியாக தடை விதித்துள்ளது கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். அதே சமயம் தியேட்டருக்கு வெளியே நின்று பொதுமக்களிடம் இதுபோன்ற சேனல்கள் கருத்து கேட்டால், அதில் நாங்கள் தலையிட முடியாது என்றும் கூறியுள்ளது. இந்த புதிய உத்தரவின் மூலம் இனிவரும் நாட்களில் படங்களின் வசூல் கூடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.