கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் |
களவாணி புகழ் ஓவியாவை கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு வரை குத்தகைக்கு எடுத்து வைத்திருந்தார் விமல். ஆனால் ஆளாலுக்கு அவர்களைப்பற்றியே கிசுகிசுத்துக் கொண்டிருந்ததால், எதற்கு வம்பு என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே தனது பாசறையில் இருந்தே ஓவியாவை கழட்டிவிட்டார் விமல். அதோடு, தன்னை சந்திக்கும் இயக்குனர்களிடம் ஓவியா புராணம் பாடி, அவருக்கு சிபாரிசு செய்வதையும் நிறுத்தினார். இதன்காரணமாக, கோடம்பாக்கத்தில் பிழைப்பு இல்லாமல் இப்போது கன்னட சினிமாவில் தஞ்சமடைந்திருக்கிறார் நடிகை.
இந்த நிலையில், கேடி பில்லா கில்லாடி ரங்காவில் தனக்கு ஜோடியாக நடித்த பிந்துமாதவியை இப்போது தனது பாசறை நடிகையாக்கி விட்டதாக விமலைப்பற்றி இன்னொரு செய்தி கோலிவுட்டில் கசிந்து கொண்டிருக்கிறது. அதன்காரணமாகத்தான் அடுத்தபடியாக எழில் இயக்கத்தில் தான் நடிக்கும் தேசிங்கு ராஜா படத்திலும் அவரை தனக்கு ஜோடியாக்கிவிட்டார் என்கிறார்கள். ஆனால் இந்த சேதியறிந்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கோபத்தை வெளிப்படுத்துகிறார் பிந்துமாதவி. விமல் எனக்கு எதற்காக சிபாரிசு செய்யப்போகிறார். அவர் என்ன எனக்கு மேனேஜரா என்கிறார். அதோடு, நடிகைகளை எந்தவொரு இயக்குனரோ, படாதிபதியோ ஹீரோவை கேட்டெல்லாம் ஒப்பந்தம் செய்வதில்லை. அந்தக்காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் கதைக்கு எந்த நடிகை பொருத்தமாக இருப்பாரோ அவரைத்தான் நடிக்க வைக்கிறார்கள். அப்படித்தான் எனக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது என்று மூச்சு விடாமல் பேசுகிறார் பிந்துமாதவி.