‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 சமீபத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் 100நாளை நெருங்கிய இவர் பணப்பெட்டி டாஸ்க்கில் வெளியேறினார். வெளியே வந்தபின் கதிர் என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாமலிலிருந்தது. இந்நிலையில், ஊடகங்களில் தற்போது பேட்டி தர ஆரம்பித்துள்ள கதிர், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது என்று கூறியுள்ளார். அப்போது பிக்பாஸ் டைட்டில் சர்ச்சை குறித்து பேசும்போது 'அசீமிற்கு மக்கள் அனைவரும் ஓட்டு போட்டதால் தான் வெற்றி பெற்றார். எனவே, அவரை எதுவும் சொல்ல முடியாது. ஆனால், ஷிவின் வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர் வெற்றியை அனைவருமே சேர்ந்து கொண்டாடி இருக்கலாம்' என கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு கதிர் முதன்முதலாக ஷிவின் குறித்து பேசியுள்ளார். இதை கதிர் மற்றும் ஷிவினின் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.