ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 சமீபத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் 100நாளை நெருங்கிய இவர் பணப்பெட்டி டாஸ்க்கில் வெளியேறினார். வெளியே வந்தபின் கதிர் என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாமலிலிருந்தது. இந்நிலையில், ஊடகங்களில் தற்போது பேட்டி தர ஆரம்பித்துள்ள கதிர், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது என்று கூறியுள்ளார். அப்போது பிக்பாஸ் டைட்டில் சர்ச்சை குறித்து பேசும்போது 'அசீமிற்கு மக்கள் அனைவரும் ஓட்டு போட்டதால் தான் வெற்றி பெற்றார். எனவே, அவரை எதுவும் சொல்ல முடியாது. ஆனால், ஷிவின் வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர் வெற்றியை அனைவருமே சேர்ந்து கொண்டாடி இருக்கலாம்' என கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு கதிர் முதன்முதலாக ஷிவின் குறித்து பேசியுள்ளார். இதை கதிர் மற்றும் ஷிவினின் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.