அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் | கதை திருடும் சினிமா இயக்குனர்கள்: எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆவேசம் |
நடிகை ஹன்சிகா கடந்தாண்டு டிசம்பரில் தொழிலதிபர் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தானில் இவர்களது திருமணம் பிரமாண்டமாய் நடந்தது. கடந்த ஒரு மாதமாக திருமண வாழ்க்கையை மகிழ்ச்சி உடன் கொண்டாடி வந்த ஹன்சிகா மீண்டும் படப்பிடிப்பில் நடிக்க துவங்கி உள்ளார். இதற்காக மும்பையில் இருந்து சென்னை வந்த ஹன்சிகாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பலரும் அவருக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றும், திருமண வாழ்த்தும் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹன்சிகா, ‛‛ஒரு மகள் தாய் வீட்டிற்கு வரும் உணர்வை இங்கு வந்தது தருகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறேன். நந்தகோபால் இயக்கும் படத்தில் இன்று முதல் நடிக்கிறேன். இந்தாண்டு எனது 7 படங்கள் ரிலீஸாக உள்ளது மகிழ்ச்சியை தருகிறது. அந்தவகையில் இந்தாண்டு எனக்கு லக்கியான ஆண்டு. தொடர்ந்து ஒரு மாதம் சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய காலத்தில் அனைவரும் சமம். கல்யாண வாழ்க்கைக்கு பின் மோதிரம் தான் மாறி உள்ளது'' என்றார்.