'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்து ஜனவரி 25ம் தேதி வெளிவந்த படம் 'பதான்'. முதல் நாளில் 100 கோடி வசூலை அள்ளிய இப்படம் இரண்டாம் நாளிலும் 100 கோடியைக் கடந்தது. நேற்றைய மூன்றாம் நாளிலும் 100 கோடி வசூலைப் பெற்று ஹாட்ரிக் 100 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் மூன்றே நாட்களில் 300 கோடி வசூலைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் மட்டும் மொத்த வசூலாக 200 கோடியையும், வெளிநாடுகளில் 100 கோடியையும் கடந்துள்ளது. இந்திய நிகர வசூலாக 161 கோடி வரை பெற்றுள்ளது என்று பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்துள்ளதாம்.
இதற்கு முன்பு தென்னிந்தியப் படங்களான 'கேஜிஎப் 2' 140 கோடியும், 'பாகுபலி 2' 127 கோடியும் பெற்ற சாதனையை 161 கோடி வசூலித்து 'பதான்' புதிய சாதனை படைத்துள்ளது என்கிறார்கள். முதல் முறையாக ஒரு ஹிந்திப் படம் இந்த அளவு வசூலித்திருப்பது பாலிவுட்டினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் நிச்சயம் 400 கோடி வசூலைத் தாண்டிவிடும் என்று மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.