'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரது 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக கடந்த வருடமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் முதல் முறையாக நடிக்கும் இப்படத்திற்காக அவருக்கு முந்தைய சம்பளத்தை விட அதிகமான சம்பளம் பேசப்பட்டது என்றும் சொன்னார்கள்.
'துணிவு' படம் வந்து பெரும் வெற்றி பெற்ற பிறகு அஜித்தின் எண்ணத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அடுத்தும் ஆக்ஷன் படமாகக் கொடுப்பதுதான் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் என்று யோசிக்கிறாராம். விக்னேஷ் சிவன் இதற்கு முன்பு இயக்கிய படங்கள் நகைச்சுவை கலந்த ரொமான்டிக் படங்களாகத்தான் இருக்கும். அவர் ஆக்ஷன் படங்களை இயக்கியது கிடையாது.
எனவே, அதிரடியான ஆக்ஷன் படத்தை கொடுக்கக் கூடிய இயக்குனரின் படத்தில் நடிக்கலாம் என்பதுதான் அந்த முடிவாம். அஜித் 62க்கு வேறு ஒரு இயக்குனர், அதற்குப் பிறகு வேண்டுமானால் அஜித் 63க்கு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
தற்போது அஜித், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் லண்டனில் லைக்கா குழுமத் தலைவர் சுபாஷ்கரனுடன் பேசி வருகிறார்களாம். ஓரிரு நாட்களில் யார் யார் எந்தப் படம் என்பது குறித்து அறிவிப்பு வரலாம் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.